News October 15, 2024
தடையின்றி செல்போன் சேவை கிடைக்க ஏற்பாடு

கனமழையால் செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்கும் வகையில், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்பட்டால், மற்ற நிறுவனங்களின் உதவியுடன் செல்போன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, Airtel, Jio உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
தமிழகத்தில் 2,500 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2.513 உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு & D.Cop., வயது வரம்பு: 18 – 32. விண்ணப்பக் கட்டணம்: ₹500. ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.29. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News August 14, 2025
நான் சுயநலமாக சிந்தித்தது கிடையாது: வைகோ

சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம், அது மனித இயல்பு என வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் சுயநலமாக சிந்தித்ததில்லை, மக்களுக்காக குரல் கொடுக்கும் நானே ரியல் பெரியாரிஸ்ட் என பெருமிதம் தெரிவித்தார். தனது தாயார், தம்பி, மகன் என மக்களுக்காக சேவை செய்யும் தனது குடும்பம் தியாக குடும்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 14, 2025
ஒரே தியேட்டரில் தனுஷ், லதா ரஜினிகாந்த்

‘கூலி’ பட ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு தான் லதா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்துள்ளார். மனைவியை விட்டு பிரிந்த தனுஷ், தனது தலைவரை தரிசிப்பதை விடமாட்டார் என அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். லோகேஷ், அனிருத், ஸ்ருதி ஆகியோர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கின்றனர்.