News January 2, 2025
தடையை மீறி போராட்டம்: அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் நாளை மதுரையில் ‘நீதி கேட்பு பேரணி’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை மதுரையில் நீதி கேட்பு பேரணி நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். போலீசார் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திராவிட மாடலை ஆராயும் வட இந்திய யூடியூபர்கள்: ஸ்டாலின்

2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், வட இந்திய யூடியூபர்கள் திராவிட மாடலை ஆராய்ந்து, அதனை அவர்களது மாநிலங்களில் செயல்படுத்த அறிவுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் என்றார்.
News September 14, 2025
EPS கையெழுத்திட்டதில் கால்வாசி கூட வரவில்லை: CM

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் பாதிகூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு நிகழ்வில் பேசிய அவர், EPS கையெழுத்திட்ட முதலீடுகளில் கால்வாசி கூட வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 77% செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
News September 14, 2025
பீர் பிரியர்கள் கவனத்திற்கு..

மதுபானம் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வாசனை மாற்றங்களால், பீர் குடிப்பவர்கள் கொசுக்களை ஈர்க்கும் வாய்ப்பு 1.35 மடங்கு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலை., 1000 கொசுக்கள், 500 மனிதர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில், பீர் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வியர்வை மூலம் 100 மீட்டர் தொலைவிலும் மனித வாசனையை கொசுக்களால் உணர முடியுமாம். உஷாரா இருங்க!