News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.

Similar News

News January 10, 2026

கடலூர்: 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

புவனகிரி அடுத்த வத்ராயன்தெத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் திவாகர்(15). இவர் நெய்வேலியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்ததால், ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் வராததால் மனமுடைந்த மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

News January 10, 2026

கடலூர்: பணிச்சுமையால் கோர்ட் ஊழியர் தற்கொலை

image

சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரிதா (46). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள கோர்ட்டில் ஆவண எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிதா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சரிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!