News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.

Similar News

News January 2, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

2026-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான வரும் ஏப்.15ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு உதவி இல்லாமல் திருநங்கைகள் சுயமாக முன்னேறி இருப்பவர்கள் <>https://awards.tn.gov.in<<>> இணையதளத்தில் 18.2.2026 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

கடலூர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

image

கடலுார் முதுநகர் அடுத்த குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாம்பாள் (80). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர், விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் படுகாயமடைந்தார். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!