News March 18, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.
Similar News
News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞருக்கு சிறை

சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தை சேர்ந்த டிராவிட்(23), என்பவர், 11ஆம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கு கடந்த 12.7.2021 அன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து டிராவிட்டை கைது செய்தனர். இந்நிலையில், கடலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் நேற்று நீதிபதி குலசேகரன், டிராவிட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


