News March 18, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.
Similar News
News December 15, 2025
கடலூர்: திருமணம் மறுப்பு-இளைஞர் தற்கொலை

கிள்ளையைச் சேர்ந்தவர் உலகநாதன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகநாதன் தனது காதலியை சந்தித்து திருமணம் செய்யக் கூறியபோது அவர் மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த உலகநாதன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
கடலூர்: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


