News March 18, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.
Similar News
News November 23, 2025
கடலூர் அருகே துப்பாக்கி சூடு

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி வல்லம்படுகை நவீன் என்பவரை நேற்று அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் காவலர்களை கத்தியைக்காட்டி மிரட்யுள்ளார். இந்நிலையில், அவரின் ஆயுதத்தை மீட்க இன்று காலை மாரியப்பா நகர் பகுதியில் போலீசார் அவரை அழைத்த சென்றபோது மீண்டும் கத்தியால் வெட்ட முயற்சித்ததால் அவரை சுட்டு பிடித்தனர்.
News November 23, 2025
கடலூர்: தப்பி ஓடிய குற்றவாளிக்கு காலில் மாவு கட்டு

கடலூர், தோப்புக்கொல்லை சேர்ந்தவர் கவி (எ) கவியரசன்(26). இவர் கஞ்சா வழக்கு மற்றும் பெண்ணை தாக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் வார சந்தையின் பின்புறம் உள்ள, என்.எல். சி தைலம் தோப்பில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற நெய்வேலி போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதில், அவருக்கு சிகிச்சையளித்து சிறையில் அடைத்தனர்.
News November 23, 2025
கடலூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் சாந்தி(47). இவர் தனது வீட்டின் அருகில் தவறிகீழே விழுந்ததில் வயிற்றில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


