News June 28, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

image

நாய், பறவைகளை கணக்கெடுக்கும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்தார். மேலும், வன்னியர் இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்னை குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

Similar News

News November 20, 2025

புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: TN அரசு

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை HC-ல் பதிலளித்துள்ளது. ஏற்கெனவே, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, டிசம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2025

பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

image

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

News November 20, 2025

கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

image

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!