News June 28, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

image

நாய், பறவைகளை கணக்கெடுக்கும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்தார். மேலும், வன்னியர் இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்னை குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

Similar News

News November 24, 2025

TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

image

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

MLA கொலை வழக்கு: பவாரியா கும்பலுக்கு ஆயுள் தண்டனை

image

2005-ல் அதிமுக MLA-வாக இருந்த சுதர்சனம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளிகள் ராகேஷ், ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005-ல் MLA சுதர்சனத்தை கொன்றுவிட்டு அவரது மனைவி, மகனை கொடூரமாக தாக்கிவிட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

News November 24, 2025

புயல் அலர்ட்: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

<<18376155>>புயல் <<>>உருவாகவுள்ளதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கை, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.

error: Content is protected !!