News October 16, 2024

புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை.. SB அறிவுறுத்தல்

image

மின்தடை குறித்து பெறப்படும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்காெண்டார். மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும், புகார்தாரரிடம் பேசி குறைகள் சரி செய்யப்பட்டதை உறுதி செய்தபிறகே புகாரை முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

Similar News

News August 20, 2025

ரால்ப் வால்டோ எமர்சனின் பொன்மொழிகள்

image

* ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது அறிவு. ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை விட்டுவிடுவது ஞானம்.
*தோல்விகள் தங்கள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
* உங்களை வேறு ஏதாவது ஒன்றாக மாற்றியமைக்க முயற்சிக்கும் இவ்வுலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே சாதனைதான்.
* சிறந்த நபரை தேர்ந்தெடுக்காதீர்கள், உங்களை சிறந்த நபராக மாற்றக்கூடிய நபரைத் தேர்ந்தெடுங்கள்.

News August 20, 2025

50-வது திருமண நாள்: வாழ்த்தியவர்களுக்கு CM நன்றி

image

CM ஸ்டாலின் தனது 50-வது திருமணநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், உயிரென உறவென துர்கா தன்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இத்தருணத்தில் இல்லம்தேடி வந்து தங்களை வாழ்த்திய தோழமை இயக்க தலைவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

News August 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 433 ▶குறள்: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். ▶ பொருள்: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

error: Content is protected !!