News April 25, 2025

மாநாட்டை புறக்கணித்த முக்கிய துணை வேந்தர்கள்

image

கவர்னர் தலைமையில் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. VC சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை VC பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு செல்லவில்லை. கோவை பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழங்களில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. மொத்தமுள்ள 52 பல்கலை.யில் 34-ல் இருந்து VC பங்கேற்றுள்ளனர்.

Similar News

News April 25, 2025

பங்குச்சந்தையில் ₹8 லட்சம் கோடி நஷ்டம்

image

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2025

தங்கம் விலை 2 நாள்களாக சரிவு.. காரணம் என்ன?

image

தங்கம் விலை 22-ம் தேதி 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த 2 நாள்களில் ரூ.2,280 சரிவைக் கண்டது. USA டாலர் மீதான மதிப்பு அதிகரிக்கையில், அதன் மீது முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு சரிகையில் தங்கம் மீது முதலீடு அதிகரித்து விலை அதிகரிக்கும். தற்பாேது டாலர் மதிப்பு உயர்வது உள்ளிட்டவையே தங்கம் விலை சரிவுக்கு காரணமாகும்.

News April 25, 2025

சிந்து நீரை எங்கே சேமிக்க போகிறோம்? ஓவைசி கேள்வி

image

பாக். செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது நல்ல முன்னெடுப்புதான் என்றாலும், தடுத்து வைக்கும் நீரை நாம் எங்கு சேமிக்கப் போகிறோம் என ஹைதராபாத் MP ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் நடந்த பைசரன் புல் வெளிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்தை அடைய பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!