News May 16, 2024
ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2009இல் அமைச்சராக இருந்த போது வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
எம்மா எம்மா இன்னாமா இது…

புது புது பியூட்டி டிப்ஸ் டிரெண்டாவது வழக்கம். அதுபோல தற்போது பெண்கள் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவுவது டிரெண்டாகி வருகிறது. மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள், புரதம் இருப்பதால் இது முகத்தை பொலிவாக்குவதாக இதை செய்பவர்கள் சொல்கின்றனர். ஆனால், ரத்தத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால், இது முகத்தில் Dermatitis எனும் மோசமான நோயை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News November 28, 2025
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்: ரகுபதி

செங்கோட்டையன் தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்வார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்லும் அசைன்மென்ட்டிற்காக தான் செங்கோட்டையன் அங்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.


