News August 15, 2024
சவுக்கு சங்கர் மீதான விசாரணைக்கு தடை

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இன்று விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரத்திலும், நாளை மறுநாள் தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News November 16, 2025
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் இன்று காலை <<18301754>>வெடிகுண்டு மிரட்டல்<<>> விடுத்த பெண் சிக்கினார். அவர் சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான ராதா என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ராதாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல ஹாஸ்பிடலில் அவரை சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.


