News August 15, 2024
சவுக்கு சங்கர் மீதான விசாரணைக்கு தடை

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
News November 22, 2025
தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: கனிமொழி

ஒவ்வொரு மசோதாக்களின் மூலமாகவும் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு சரியான நிதி பகிர்வை வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மெட்ரோ உள்பட நமக்கு வரவேண்டி ரயில் திட்டங்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், அதனை எதிர்த்து திமுக போராடுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 22, 2025
வரலாற்றில் இன்று

➤1939 – உ.பி Ex CM முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.
➤ 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் தொடங்கியது.
➤1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
➤ 1995 – உலகின் முதலாவது கணினி அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி வெளியானது.
➤ 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


