News August 15, 2024
சவுக்கு சங்கர் மீதான விசாரணைக்கு தடை

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
கொரோனா பற்றி கூறியவரை பழிவாங்க துடிக்கும் சீனா

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக உலகிற்கு சொன்னதால், தன்னை பழிவாங்க சீனா முயற்சிப்பதாக, வைரலாஜிஸ்ட் லி-மியாங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் உள்ள தனது பெற்றோர், கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, தன்னை நாடு திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகிற்கு சொன்னதும், யான் US-ல் தஞ்சம் புகுந்தார்.
News December 9, 2025
கோல்டன் குளோப்ஸ் ஃபீவர் ஸ்டார்ட் ஆனது!

2026 கோல்டன் குளோப்ஸ் பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த இயக்குநர், நடிகர் என 9 பிரிவுகளில் டிகாப்ரியோவின் ‘One Battle After Another’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நார்வே படமான ‘Sentimental Value’ 8, ஹாலிவுட் படமான ‘Sinners’ 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி, ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
News December 9, 2025
கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.


