News August 15, 2024

சவுக்கு சங்கர் மீதான விசாரணைக்கு தடை

image

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

சென்னை: நாட்டையே உலுக்கிய பவாரியா வழக்கில் இன்று தீர்ப்பு!

image

2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். இவரை ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனையடுத்து, ஐஜி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தது. இந்த கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.21) தீர்ப்பு வழங்கவுள்ளது.

News November 21, 2025

போலி ORS கலவைகளை உடனே அகற்ற FSSAI உத்தரவு

image

‘ORS’ என்று தவறாக விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்களை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்ற மாநிலங்களுக்கு, FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் WHO பரிந்துரைத்த மருந்து. எனவே, WHO அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் எனக்கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News November 21, 2025

தமிழக விரோத நிலைப்பாட்டில் பாஜக: திருமாவளவன்

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்புக்கு BJP-ன் தமிழக விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் சாடியுள்ளார். 2011 மக்கள் தொகை விவரங்களை காட்டி திட்டத்தை நிராகரிப்பது சரியானது அல்ல என்றும், அங்கு கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு கூட மெட்ரோ ரயில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!