News April 9, 2024

மத்திய அரசின் தலையீட்டால் மணிப்பூரில் முன்னேற்றம்

image

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், “மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

Similar News

News March 28, 2026

சவுதி பிரதமருடன் PM மோடி ஆலோசனை

image

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது மேற்காசிய பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியாவின் கண்டனத்தை மோடி பதிவு செய்தார். மேலும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஏற்றுக் கொண்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

News March 28, 2026

சீர்காழியில் தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

image

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

முழு ஆண்டு தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1-ல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி 2 நாள்களுக்கு முன்னதாக, மார்ச் 30-க்குள் (திங்கள்கிழமை) பள்ளி நிர்வாகத்திடம் வினாத்தாள்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. EMIS தளத்தில் வினாத்தாள்களை அலுவலர்கள் டவுன்லோடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களே, பதற்றமின்றி தேர்வை எழுதுங்கள். ALL THE BEST!!!

error: Content is protected !!