News June 23, 2024
71,000 டன் வெங்காயம் கொள்முதல்

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மொத்தம் 5 லட்சம் டன் வெங்காயத்தை ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 70,987 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில் 74,071 டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
Similar News
News November 16, 2025
BREAKING: இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 30 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 124 ரன்கள் என்ற டார்கெட்டுடன் களமிறங்கிய இந்திய அணி 93 ரன்களிலேயே பரிதாபமாக ஆல் அவுட் ஆனது.
News November 16, 2025
வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

முட்டை விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மொத்த கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்ந்து ₹5.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹6.50 முதல் ₹7 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முட்டை ₹5.90-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்தது.
News November 16, 2025
தேசிய பத்திரிகை தினம்: ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக பத்திரிகைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் தோல்விகள், ஊழல்கள், வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#Nationalpressday<<>>


