News December 20, 2024

புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி

image

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய உ.பி. யோத்தாஸ் அணி ஆட்ட நேர முடிவில் 59-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 79 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, உ.பி அணிகள் தலா 74 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Similar News

News July 5, 2025

பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடிய மைக்ரோசாஃப்ட்

image

உலகளவில் மிகப்பெரிய IT நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 5, 2025

இறுதி போட்டிக்கு முன்னேறிய திண்டுக்கல்

image

TNPL குவாலிபையர் 2-ல் திண்டுக்கலுக்கு எதிராக முதலில் விளையாடிய சேப்பாக் 178 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கேப்டன் அபராஜித்(67), ஜெகதீசன்(81) சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினர். தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல்லில், பாபா இந்திரஜித், விமல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். திண்டுக்கல் – திருப்பூர் பைனலில் மோத உள்ளன.

News July 5, 2025

மகளிர் உரிமை தொகை பெற ஜுலை 15யில் விண்ணப்பம்

image

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில்
இத்திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ம் தேதி முதல் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!