News November 23, 2024
வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி

இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தம் மீது வயநாடு மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த வெற்றியானது வயநாடு மக்களுக்கான வெற்றி என்றும், இதை தனது பணிகள் மூலம் வயநாடு மக்களை உணரச் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்?

தாய்மார்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் பசும்பாலில் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது. அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 4, 2025
தேவை இல்லாத பதற்றத்தை உண்டாக்க முயற்சி: EPS

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 நாள்களாக தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க, திமுக கபட நாடகம் ஆடுவதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். தீபம் ஏற்றக் கூறி மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தும், அதை செயல்படுத்த தவறியதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ‘எம்மதமும் சம்மதம்’ என இல்லாமல், தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
டிகிரி வேண்டாம்.. Zoho-ல் வேலை உண்டு: ஸ்ரீதர் வேம்பு

US-ல் திறமையான பள்ளி மாணவர்களுக்கு, பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி எனவும், டிகிரியை காட்டிலும் திறமைக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர டிகிரி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, கமெண்ட் பண்ணுங்க.


