News November 23, 2024
வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி

இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தம் மீது வயநாடு மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த வெற்றியானது வயநாடு மக்களுக்கான வெற்றி என்றும், இதை தனது பணிகள் மூலம் வயநாடு மக்களை உணரச் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 31, 2025
அரசு பஸ் கோர விபத்து.. பள்ளி மாணவர்களுக்கு சோகம்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே நடந்த இந்த விபத்தில், ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 11 பேர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.
News October 31, 2025
வான் ஆதிக்கத்தை பலப்படுத்த புதிய ஏவுகணைகள்

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
PM மோடிக்கு திமுக MP கனிமொழி சவால்!

திமுக அரசு பிஹார் மக்களை அவமதிப்பதாக PM மோடி பேசியது சர்ச்சையான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு TN வரும்போது, PM மோடி இதே கருத்தை சொல்லட்டும் என்று திமுக MP கனிமொழி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு தங்களை எப்படி வைத்துள்ளது என்று தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


