News November 19, 2024

கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்

image

தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 644798 வழங்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு அவர் தூக்கமின்றி இருந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதியம் அனைத்து சிறைக் கைதிகளுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. அதை கஸ்தூரி எடுக்கவில்லை. இரவில் கலவை சாதத்தையும் அளவாகவே அவர் சாப்பிட்டுள்ளார்.

Similar News

News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

image

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

News March 13, 2026

எரித்து பொசுக்குவோம்… USA-க்கு ஈரான் எச்சரிக்கை

image

ஈரான் ராணுவம் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் மீது மிகச்சிறிய அளவிலான தாக்குதல் நடத்தினாலும் கூட, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு உதவும் அனைத்து எண்ணெய் & எரிவாயு உள்கட்டமைப்புகளையும் எரித்து அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

News March 13, 2026

கரூர் வழக்கில் மோதும் செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர்

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதை, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு சம்மன் கொடுத்தால் விஜயபாஸ்கருக்கு என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சம்மன் வந்தால் நடந்ததை சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே என்று செந்தில் பாலாஜியை மீண்டும் விஜயபாஸ்கர் கேட்டுள்ளார். இது கரூர் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!