News April 15, 2024
கேரளாவில் பிரதமர் மோடி, ராகுல் பரப்புரை

கேரளாவின் திருச்சூரில் பிரதமர் மோடியும், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி ஆதரவு திரட்டுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் இன்று காலை ராகுல் பரப்புரையை முடித்து சென்ற நிலையில், மோடி கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழகம் வருகிறார்.
Similar News
News October 27, 2025
எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது?

உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் போதுமான நேரம் தூங்குவது மிக அவசியம். வயது அடிப்படையில் 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரம், 65 வயதுக்கு டாக்டர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நேரம் தூங்க தவறினால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். நீங்க எவ்வளவு மணி நேரம் தூங்குறீங்க?
News October 27, 2025
அதிகாலையில் புயல்… கனமழை வெளுத்து வாங்கும்

நாளை(அக்.27) அதிகாலையில் மொன்தா புயல் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது, நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாய் இருங்கள்!
News October 27, 2025
தவெக தலைவர்களுக்கு சிபிஐ சம்மன்

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ N.ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இருவரும் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் A2 ஆக N.ஆனந்த், A3 ஆக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


