News April 3, 2024

பிரதமர் பொய் செய்தியை பரப்புகிறார்

image

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புகின்றனர் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ‘பிரதமர் பேச்சு இலங்கை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை தாரைவார்ப்பதை ஏற்க முடியாது’ என விமர்சித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

பொங்கல் விடுமுறை.. வந்தது புது அப்டேட்!

image

பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் ஜன.9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஜன.9-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜன.10-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜன.11-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும் <>IRCTC-ல்<<>> முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News November 10, 2025

இந்த செடிகள் உங்கள் உயிரை காக்கும்..

image

காற்று மாசை பார்த்து நீங்கள் பயப்படுவது சரியே. ஏனென்றால் உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் மக்கள் இதனால் இறக்கின்றனர். அத்துடன் 10-ல் 9 பேருக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிலர் காஸ்ட்லியான Air Purifier-களை வாங்கி வைக்கிறார்கள். இதற்கு பதிலாக வீட்டுக்குள் சில செடிகளை வளர்க்கலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. பலரது உயிரை காக்கும் SHARE THIS.

News November 10, 2025

துரைமுருகன் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தயாளு

image

கருணாநிதி எவ்வளவோ கூறியும் 1971 தேர்தலில் தான் போட்டியிட மறுத்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். அதன்பின், தன்னிடம் தயாளு அம்மாள், ஏன் சீட் வேண்டாம் என மறுக்கிறாய்; தேர்தல் செலவை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; முதலில் நீ தேர்தலில் நில் எனக் கூறியதோடு, ₹10,000 கொடுத்தார். தான் அரசியலில் இவ்வளவு உச்சத்தில் இருக்க பிள்ளையார் சுழிபோட்டது ஸ்டாலின் தாயார் தயாளுதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!