News January 24, 2025

வேலையில் Pressure-ஆ? அது உங்களுக்கு மட்டும் இல்லை!

image

25 வயசுக்குள்ள இருக்க, Corporate ஊழியர்கள் 90% பேருக்கு Anxiety அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வு எச்சரிக்கிறது. பணிச்சூழல், வேலை அழுத்தம், லீவு இல்லாதது… இப்படி பல காரணங்கள் ஊழியர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம். 2023இல், 19% ஆக இருந்த தற்கொலை ரிஸ்க், 2024இல் 22% ஆக அதிகரித்துள்ளது. ஒரு வேலை போனா, இன்னொரு வேலை கிடைக்கும். ஆனா உயிர் ஒன்னுதான். Take Care, Guys!

Similar News

News October 22, 2025

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!

News October 22, 2025

டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

image

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

News October 22, 2025

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!