News April 5, 2025

அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் $10 டிரில்லியன் இழப்பு!

image

உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை 2ஆவது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. Dow Jones பங்குச்சந்தையில் 2,200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சுமார் $10 டிரில்லியன் டாலரை அமெரிக்க முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 24, 2025

இலவசமாக AI பற்றி படிக்க அரசின் புதிய திட்டம்!

image

ஒரு பைசா செலவில்லாமல் AI பற்றி படிக்க, Yuva AI for All திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. AI பற்றிய அடிப்படை கான்செப்ட்டுகளை 4.5 மணி நேரத்தில் நீங்கள் கற்கலாம். அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. <>yuva-ai-for-all<<>> பக்கத்திற்கு சென்று இன்றே AI பற்றி படியுங்கள். படித்து முடிக்கும் பட்சத்தில் சான்றிதழும் கிடைக்கும். SHARE.

News November 24, 2025

தேஜஸ் போர் விமானம் விபத்து.. HAL பங்குகளின் விலை சரிந்தது

image

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அதில் பட்டியலிடப்பட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான HAL பங்குகளின் விலை 8.5% சரிந்து, ₹4,205-க்கு வர்த்தகமாகி வருகின்றன. துபாய் ஏர்ஷோவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதால், அதை தயாரித்த HAL நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

News November 24, 2025

நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே: ஸ்டாலின்

image

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என CM ஸ்டாலின் சாடியுள்ளார். சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் அரசியல் செய்தார் EPS. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்காமல், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என EPS காத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!