News April 5, 2025
அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் $10 டிரில்லியன் இழப்பு!

உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை 2ஆவது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. Dow Jones பங்குச்சந்தையில் 2,200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சுமார் $10 டிரில்லியன் டாலரை அமெரிக்க முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
இந்தியா – பாக்., மோதலில் டிரம்ப் புது தகவல்

இந்தியா – பாக்., மோதலை வரி விதிப்பை சுட்டிக்காட்டி தானே தீர்த்து வைத்ததாக USA அதிபர் டிரம்ப் 60-வது முறையாக கூறியுள்ளார். அதிலும் இம்முறை, 350% வரி விதிக்கப்படும் என எச்சரித்ததும், நாங்கள் (இந்தியா) போருக்கு போவதில்லை என்று PM மோடி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, டிரம்ப்பின் தொடர்ச்சியான மத்தியஸ்தம் குறித்த பேச்சை <<18336352>>காங்.,<<>> கிண்டலடித்திருந்தது.
News November 21, 2025
காதல் பறவைகளுக்கு வாழ்த்து கூறிய மோடி..!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை நவ.23-ல் கரம்பிடிக்கிறார். அவர்களுக்கு <<18342884>>நிச்சயதார்த்தம்<<>> நடந்ததையொட்டி, வாழ்த்து தெரிவித்து PM மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், இரு சாதனை நபர்களின் சங்கமம் என பாராட்டு தெரிவித்த அவர், இந்த ஜோடி தங்களது பயணத்தில் சுற்றியுள்ளவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
அனில் அம்பானியின் ₹1,400 கோடி சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி & அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீது ED விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அனில் அம்பானிக்கு தொடர்புடைய ₹1,400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை ED முடக்கியுள்ளது. இதுவரை ₹9,000 கோடி அளவிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அனில் ED அலுவலகத்தில் ஆஜராகவில்லை.


