News March 31, 2025

இஸ்லாமியர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

image

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை இணக்கமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க நம்மை ஊக்குவிப்பதாக என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ரம்ஜான் பண்டிகை நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை அதிகரிக்கட்டும் என பிரதமர் மோடி Xல் பதிவிட்டுள்ளார்.

Similar News

News January 19, 2026

திமுகவை சீண்டிய காங்கிரஸ் MLA

image

2021-ல் எதிர்க்கட்சி(அதிமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கியபோதும் கூட ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் MLA ராஜேஷ்குமார் கூறியுள்ளார். ஆனால், இன்று காங்கிரஸ் வாக்குச்சாவடி அளவிலும், கிராம அளவிலும் பலமடைந்திருப்பதாக கூறிய அவர், அந்த அடிப்படையில்தான் அதிகமான சீட்டுகள் கேட்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் எந்தத் தவறும் இல்லையே எனவும் அவர் பேசியுள்ளார்.

News January 19, 2026

விஜய் பட நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. பளார்!

image

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி கேரவனில் நுழைந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணலில் இதுபற்றி பேசிய அவர், கேரவனில் நுழைந்த நடிகர் எல்லை மீறி தன்னை தொட முயன்றபோது அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

image

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.

error: Content is protected !!