News March 21, 2024
தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்

அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 13, 2025
டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.
News November 13, 2025
BIHAR RESULT: வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

பிஹார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (நவ.14) நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தலைநகர் பாட்னாவில் நவ.16 வரை தேர்தல் நடத்தை விதிகளை நீட்டித்து ECI உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


