News June 28, 2024

ஆளுநரை இன்று சந்திக்கிறார் பிரேமலதா

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக ஆளுநர் ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று சந்திக்க உள்ளார். கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 19ஆம் தேதி விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 64 பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆளுநரை சந்தித்து அவர் புகாரளிக்க உள்ளார்.

Similar News

News March 2, 2026

டெய்லி டிபனாக தோசை சாப்பிடலாமா..?

image

இந்த கேள்வி உங்களுக்கு எழுந்தால், நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றை சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம், பிஸ்தாவையும் சேர்க்கலாம் என்கின்றனர். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?

News March 2, 2026

கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்.. EPS முக்கிய முடிவு

image

மதுரையில் பாஜகவுடன் <<19276123>>நேற்று நடத்திய<<>> தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் கசிந்துள்ளது. பேச்சின் முடிவை EPS ஏற்கவில்லை என கூறப்படும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவர் டெல்லிக்கு திடீர் விசிட் அடிக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக, நேற்று பொதுக்கூட்ட மேடையிலேயே, அதிமுக ஆட்சி என்று EPS-ம், NDA ஆட்சி என்று PM மோடியும் முரணாக பேசியிருந்தனர்.

News March 2, 2026

கண் பார்வையை பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!

image

➤வைட்டமின் A அடங்கிய கீரைகள், மீன்கள், கேரட், நெல்லிக்காய், நட்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள் ➤UV கதிர்கள் கண்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். வெளியில் செல்லும்போது நல்ல சன்கிளாஸ் அணிந்து செல்லுங்கள். ➤நீண்ட நேரத்திற்கு மொபைல், கம்ப்யூட்டர், டிவி பார்க்க வேண்டாம். ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள், உறங்குங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!