News May 19, 2024
தேமுதிக கடனை அடைத்த பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, தேமுதிகவுக்கு அதிக கடன் இருந்ததாகவும், அதை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பிரேமலதா இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், அக்கட்சிக்கு கிடைத்த நிதியை வைத்து, ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விட்டதாகவும், இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
ராமதாஸுக்கு மீண்டும் பின்னடைவு

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளரான ப.சுவாமிநாதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாக இந்த வேட்பாளரை ராமதாஸ் களமிறக்கினார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ராமதாஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
News March 6, 2026
சற்றுமுன்: ரூ.2,500 பணம்.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு புதிய சம்பள விவர அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நியாயவிலைக் கடை படி, ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விற்பனையாளர்களுக்கு ₹1,500, ₹1,750, ₹2,000 என்ற வகையிலும், கட்டுநர்களுக்கு ₹1,000, ₹1,250, ₹1,500 என்றும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பயணப்படி தற்போதுள்ளவாறு ₹2,500 ஆகவே வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 6, 2026
இந்தியாவுக்கு அனுமதி வழங்க USA யார்? ஜோதிமணி

இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், எவ்வளவு காலம் வாங்கவேண்டும் என்பதை ஆணையிட அமெரிக்கா யார் என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது நிறுத்தப்பட வேண்டும் என்ற அவர், இதற்கு PM மோடி மக்களுக்கும் நாடாளுமன்றத்திலும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், டிரம்ப் மீதான மோடியின் குருட்டுத்தனமான மரியாதையால் ஏற்கனவே இந்தியா பெரும் விலையை கொடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


