News April 10, 2024
சிசேரியன் விரும்பும் தமிழ்நாட்டு கர்ப்பிணிகள்

தமிழ்நாட்டு பெண்கள் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிகிறது. சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக, கலாசார காரணங்களுக்காக சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News February 14, 2026
கொள்ளையடிக்க துடிக்கும் திமுக: சீமான்

மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் ₹5000 கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க திமுகவினர் துடிக்கின்றனர் என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சியை நேர்த்தியாக செய்துள்ள திமுக, சட்டம்-ஒழுங்கை காப்பதில் காட்டவில்லை என சாடினார். மேலும், திமுகவின் ஓட்டு பறிக்கும் திருட்டுத்தனத்திற்கு 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
News February 14, 2026
மரணத்தில் இருந்து உயிர் பெற்ற ‘காதலர் தினம்’

ரோமானிய மன்னன் கிளாடியஸ் 3 ஆண்கள் திருமணம் செய்யத் தடை விதித்தார். அது அப்போது நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மன்னனின் உத்தரவை எதிர்த்து பாதிரியார் வாலண்டைன் என்பவர் பல காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்காக அவரை கிளாடியஸ் மன்னன் பிப்ரவரி 14-ம் தேதி தூக்கிலிட்டான். அவரது நினைவு நாளே ஒவ்வொரு ஆண்டும் (Valentine’s Day) காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
News February 14, 2026
6 தொகுதிகளை கேட்கிறாரா கமல்?

நேற்று மநீம தலைவர் கமல் மு.க.ஸ்டாலினை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மநீமவுக்கு சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்பட 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கமல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சென்னை என்பது திமுகவின் கோட்டை என்பதால் 4 தொகுதிகளை மநீமவுக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை எனவும் அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.


