News November 14, 2024

மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி மரணம்

image

ஆம்பூரில் மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஹாஸ்பிட்டலில் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணி துர்காதேவியை தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகாக அலைக்கழித்ததால், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 11, 2025

உடல் எடை குறைப்பிற்கான சந்தையான இந்தியா?

image

இந்தியாவில் Wegovy, Mounjaro ஆகிய 2 உடல் எடை குறைப்பு ஊசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், கடந்த மார்ச் இறுதியில் விற்பனைக்கு வந்த Mounjaro, 4 மாதங்களிலேயே ₹100 கோடி, ஜூலையில் மட்டும் ₹47 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வந்த Wegovy, 2 மாதங்களில் ₹10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் உடல் எடை குறைப்பு சந்தையின் மதிப்பை இவை காட்டுகின்றன.

News August 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 424 ▶குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

News August 11, 2025

இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்: நிதின் கட்கரி

image

அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் வரி என்ற பெயரில் மற்ற நாடுகளை மிரட்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும், நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்த நாடாக மாறினால் நாம் யாரையும் மிரட்டமாட்டோம், ஏனெனில் அதையே நமது கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!