News March 28, 2025
1 – 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். 1 – 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 31, 2025
காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 31, 2025
CSKவின் மிக மோசமான ரெக்கார்ட்

2019 முதல், CSK அணி ஒரு முறைகூட 180 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இதுவரை, அணி தனது 9 சேசிங்கில், அனைத்துமே தோல்விதான். இப்படியான ரெக்கார்ட்டை வேறெந்த அணியும் செய்திடவில்லை. ஒட்டுமொத்தமாக, IPL வரலாற்றில், CSK 180 அல்லது அதற்கு அதிகமான ரன்களை 27 முறை மேல் சேசிங் செய்து, அவற்றில் 15ல் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில், 13 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
கோயிலுக்குச் சென்ற பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

தெலங்கானா மாநிலம் ஓர்கொண்டா அருகே கோயிலுக்கு சென்ற திருமணமான பெண்ணை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உறவினர்களுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுவிட்டு குட்டா பகுதிக்கு திரும்பியபோது வழிமறித்த கும்பல், உறவினர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு பெண்ணின் கைகளைக் கட்டி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. 6 பேர் சிக்கிய நிலையில், இருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.