News January 8, 2025
ICUவில் பிரசாந்த் கிஷோர்

சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஹாரில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து ஹாஸ்பிட்டல் அழைத்துச்சென்றனர். அங்கும், அவர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், நேற்றிரவு ICUவில் அனுமதிக்கப்பட்டு நரம்பு வழியாக திரவம் செலுத்தப்பட்ட பின் உடல்நலம் தேறி வருகிறது.
Similar News
News January 14, 2026
வங்கதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ICC

T20WC: பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை மாற்ற கோரிக்கை வைத்த வங்கதேசத்திற்கு ஐசிசி, ‘NO மாற்றமுடியாது’ என்று கூறியுள்ளது. போட்டி திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், விடாப்பிடியாக வங்கதேசம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
News January 14, 2026
‘ஜனநாயகன்’ சரியான நேரத்தில் வெளியாகும்: கார்த்தி

‘ஜனநாயகன்’ படம் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் தொடங்கி தற்போதைய ‘வா வாத்தியார்’ வரையிலும் பல தடங்கலை கடந்தே படங்கள் வெளியாவதாகவும், ஒரு நல்ல கதை தனக்கு தேவையானதை தானே அமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, நமது கட்டுப்பாட்டில் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.


