News September 5, 2025
போட்டியிடும் தொகுதியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு மத்தியிலும் பிஹார் தேர்தல் களம் பரபரப்புடனே காணப்படுகிறது. அந்த வகையில், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், கார்காஹர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகள் கவனமுடன் தேர்ந்தெடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தொகுதியானது, பிரசாந்த் பிறந்த தொகுதி ஆகும்.
Similar News
News September 7, 2025
கட்சியில் இருந்து நீக்கவில்லை.. பின்வாங்கும் இபிஎஸ்

செங்கோட்டையன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்த EPS, ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொதுவாக, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ‘அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்’ என்றே அதிமுக தலைமை அறிக்கை வெளியிடும். இந்த விவகாரத்தில் ஏன் EPS பின்வாங்குகிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 7, 2025
EPSஐ வேட்பாளராக ஏற்க முடியாது: TTV திட்டவட்டம்

தன்னை சந்திக்கவே EPS அச்சப்படுவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். EPS-ஐ எதிர்த்து கட்சி தொடங்கிய தான், அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் எனவும் கேள்வி எழுப்பினார். நயினார் தன்னையும், OPS-ஐயும் திட்டமிட்டு அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். <<17637974>>OPS செங்கோட்டையனை <<>>சந்திப்பதாக கூறிய நிலையில், TTV-யும் அவரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிய கூட்டணி உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
சந்திர கிரகணத்தில் தானம் செய்தால் இவ்ளோ நல்லதா!

கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்துசேரும் என்ற ஐதீகம் உள்ளது.
*வெள்ளியை தானம் செய்வதால், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் & செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்.
*அரிசி சந்திரனுடன் தொடர்புடையதால், அரிசியை தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
*பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். இதனால் புகழ், மன அமைதி கிடைக்கும். SHARE IT.