News November 25, 2024

பீகாரை மலத்துடன் ஒப்பிட்ட பிரசாத் கிஷோர்!

image

அமெரிக்காவில் உள்ள பீகார் மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய பிரசாந்த் கிஷோர், பீகார் தோல்வி மாநிலம் என்றும் Deep Shit என்றும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தனி நாடாக இருந்திருந்தால் உலகின் 11வது பெரிய நாடாக இருந்திருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். பீகாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

Similar News

News December 14, 2025

பாடகர் ஜூபின் கொலை.. யார் யாருக்கு தொடர்பு?

image

பிரபல <<17769687>>பாடகர் ஜூபின் கார்க்<<>> கொலை வழக்கில் 4 பேர் மீது SIT குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது பாதுகாப்பு பிரிவில் இருந்த நந்தேஷ்வர் போரா, பிரபின் பைஷ்யா ஆகியோரும் அதில் இடம் பெற்றுள்ளனர். வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடித்த SIT அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அசாம் மாநில CM ஹிமந்தா பிஸ்வா சர்மா விரைவில் ஜூபின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.

News December 14, 2025

இந்த பரிகாரத்தை திமுக செய்யணும்: அன்புமணி

image

கல்வி கற்க வேண்டிய வயதில் மதுவால் மாணவர்கள் சீரழிவது, வலியை தருவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். <<18550757>>பாளையங்கோட்டை சம்பவத்தை<<>> சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவிகளுக்கு மது விற்பனை செய்த, வாங்கிக் கொடுத்தவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்காக, மதுக்கடைகளை முற்றிலும் மூடி DMK பரிகாரம் செய்ய வேண்டும் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

News December 14, 2025

BREAKING: இனி இவர்களுக்கும் ₹1000.. அறிவித்தார் ஸ்டாலின்

image

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு ₹1000 வழங்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இது சர்ச்சையான நிலையில், விடுபட்ட தகுதியுடைய குடும்ப தலைவிகள் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!