News June 19, 2024
காங்கிரசில் மீண்டும் சேர பிரணாப் மகன் விருப்பம்

பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, கடந்த 2021இல் காங்கிரசிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர, விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காங்கிரசில் உள்ள சூழல் திரிணாமுல் காங்கிரசில் இல்லையென்றும், ஆதலால் காங்கிரஸ் தலைமையை சந்தித்து அக்கட்சியில் சேர நேரம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
Similar News
News March 19, 2026
பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இன்று வரலாறு காணாத வகையில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்றைய நாளின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் குறைந்து 74,207 புள்ளிகளிலும், நிஃப்டி 776 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளிலும் நிறைவுபெற்றுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ₹13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 19, 2026
‘பாஜக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு சர்ப்ரைஸ்’

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் தேர்தல் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, மாநில தலைவர் நயினாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நயினார் அதனை வெளியிடுவார் எனவும் தமிழிசை கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர், விவசாயிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News March 19, 2026
நெருங்கும் தேர்தல்.. இந்த போன் நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களாகிய உங்களுக்கு வாக்குச்சாவடி மையத்தை கண்டறிவதில் பல விதமான சந்தேகங்கள் ஏற்படலாம். தேர்தல் விதிமீறல் குறித்த புகார் அளிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்தின் 1800-4252-1950 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது 24 மணி நேர சேவையாகும். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்.


