News April 1, 2025
பயிற்சியாளருக்காக புதிய அவதாரம் எடுத்த பிரக்…!

ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட சோஷியல் மீடியாவில் கவனம் பெறும். அப்படித் தான், தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா தனது பயிற்சியாளர் ராமச்சந்திரன் ரமேஷுக்கு தோசை சுட்டுக் கொடுத்ததும் வைரலாகியுள்ளது. சோஷியல் மீடியாவில் இதனைப் பகிர்ந்த பயிற்சியாளர், ஒவ்வொரு முயற்சியிலும் பிரக் நன்றாக தோசை சுடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என தெரிவித்துள்ளார். இதன்படி, ₹1,000 உரிமைத்தொகையை விரைவில் உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, 2026 தேர்தலையொட்டி, ₹2,000 – ₹2,500 வரை உரிமைத் தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
News December 12, 2025
நீங்கள் இதில் படம் பார்த்தது உண்டா? Must feel..

இன்று OTT-யில் படம் பார்த்து வரும் நாம், முன்னதாக டிவியில் படம் பார்த்தோம். அப்போது, DVD-க்களில் படங்களை கண்டு களித்திருப்போம். பெற்றோரிடம் அடம்பிடித்து ₹20, ₹40 ரூபாய்க்கு சிடி வாங்கி படம் பார்த்த காலங்கள் அழகானவை. இதற்காக டிவிடி பிளேயர் வாங்கி, அதிலுள்ள மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஒயரை சரியாக கனெக்ட் செய்வதில் நாம் தான் கிங் என்று கூட நினைத்திருப்போம். நீங்கள் கடைசியாக சிடியில் பார்த்த படம் எது?
News December 12, 2025
ரயில்வேக்கு சொந்தமாக இவ்வளவு நிலமா?

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், RPF & உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


