News October 14, 2025
உருவக்கேலிக்கு பிரதீப் கொடுத்த நச் பதில்

இயக்குநராக கோமாளியில் அசத்திய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே மற்றும் டிராகன் வெற்றியால் கவனிக்கத்தக்க நடிகராகவும் மாறினார். ஆனால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்யும் ஒரு கூட்டம், இவரெல்லாம் ஹீரோவா என விமர்சிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில், உருவக்கேலி செய்வது எல்லாம் தன்னை பெரிதாக பாதிக்காது என்றும், மக்களின் அன்பு இருக்கும் போது வேறு எதை பற்றியும் யோசிக்க தேவையில்லை எனவும் பிரதீப் கூறியுள்ளார்.
Similar News
News October 14, 2025
உங்க வாகனத்துக்கு தவறாக அபராதம் போட்டுருக்கா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என தெரியுமா?. அதற்கு நீங்கள் https://echallan.parivahan.gov.in/gsticket/search இணையத்தில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தவறான அபராதம் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படும். SHARE IT
News October 14, 2025
இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். பின்பு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. CM ஸ்டாலின், விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
ஆந்திராவில் ₹1.3 லட்சம் கோடியில் AI மையம்

விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட AI மையம் அமைக்க ஆந்திர அரசுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹1.3 லட்சம் கோடி) செலவில் அமையவுள்ள ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட AI மையம் 2029-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என PM மோடி தெரிவித்துள்ளார்.