News August 7, 2024

வயநாட்டிற்கு ₹2 கோடி நிதி அளித்த பிரபாஸ்

image

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Similar News

News December 16, 2025

சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 16, 2025

BREAKING: பள்ளியில் மாணவன் மரணம்.. தமிழகத்தில் துயரம்

image

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து தலைமீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவனின் உயிர் பிரிந்தது. உறவினர்கள் மோகித்தின் உடலை கையில் ஏந்தி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

News December 16, 2025

தர்காவின் இடத்தில்தான் தூண் உள்ளது: வக்ஃபு வாரியம்

image

தீபத்தூண் என கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரிய தரப்பு தெரிவித்துள்ளது. <<18509407>>திருப்பரங்குன்றம்<<>> வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், மனுதாரரின் இந்த மனுவால் தூண் யாருக்கு சொந்தம், நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை உருவாகியுள்ளதாகவும் வக்ஃபு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தர்கா சர்வே தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை HC அமர்வு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!