News August 7, 2024
வயநாட்டிற்கு ₹2 கோடி நிதி அளித்த பிரபாஸ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News October 29, 2025
புதுவை: இரவு நேரத்தில் பெண்கள் பணியாற்ற தடை

புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் சுமித்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எந்த தொழிற்சாலைகளிலும், பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, இரவு 10 மணி வரை, அவர்களின் வீட்டுக்கு செல்ல வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 29, 2025
ODI-யில் உச்சம் தொட்ட ஹிட்மேன்!

ICC வெளியிட்டுள்ள ODI பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், 781 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடந்து முடிந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் அவர் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என கருத்துக்கள் எழுந்த நிலையில், தனது பேட்டால் விமர்சனங்களுக்கு ஹிட்மேன் பதிலளித்துள்ளார்.
News October 29, 2025
வருமானத்தில் 80% நடிகருக்கு செல்கிறது: செல்வமணி

இன்று பல சூப்பர் ஸ்டார்களை, நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் மொத்த வருமானத்தில் 80% நடிகர்கள் எடுத்து செல்வதால், தயாரிப்பாளர்களால் அடுத்தடுத்து படம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என நடிகர்களுக்கு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.


