News August 7, 2024
வயநாட்டிற்கு ₹2 கோடி நிதி அளித்த பிரபாஸ்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ₹2 கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்திருந்தனர். அங்கு கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9ஆவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News December 23, 2025
₹8 கோடி அபேஸ்.. தற்கொலைக்கு முயன்ற Ex IPS!

சைபர் மோசடியில் ₹8 கோடி இழந்த பஞ்சாப் Ex IPS அமர் சிங் சஹால், 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆன்லைன் மோசடி, அதிக லாபம் என Whatsapp, telegram-ல் மோசடி கும்பல் அவரிடம் இருந்து பணத்தை சுருட்டியுள்ளது. அமர் தற்போது ICU-ல் உள்ளார். IPS அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.
News December 23, 2025
விஜய் உடன் கூட்டணி.. மறைமுகமாக தெரிவித்தார்

திமுக, காங்., கூட்டணியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் அங்கமாக (ஆட்சி அதிகாரத்தில் பங்கு) இருக்க வேண்டியது அவசியம் என காங்., மேலிட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தால் விஜய்யுடன் இன்றளவும் <<18646865>>காங்கிரஸ் பேச்சுவார்த்தை<<>> நடத்துவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 23, 2025
பாஜகவின் ஆயுதம் CBI, ED: ராகுல் காந்தி

எதிர்க்கட்சியினரை குறிவைத்து இந்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவினர் மீது ஒரு வழக்கு கூட இல்லை என்றும், CBI, ED பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் கொள்கைகள் மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.


