News May 24, 2024

பிரபாகரன் சர்ச்சை: அண்ணன் குடும்பம் முற்றுப்புள்ளி

image

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், குடும்பத்தினர் 2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதை பிரபாகரன் ஆதரவாளர்கள் நம்ப மறுக்கும் நிலையில், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் உள்ளிட்டோர் பிரபாகரன், குடும்பத்தினர் ஏற்கெனவே வீரச்சாவு அடைந்து விட்டதாகக் கூறி, கடந்த 18ஆம் தேதி வீரவணக்க நாள் நடத்தி, மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Similar News

News August 18, 2025

நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

image

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

image

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

News August 18, 2025

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!

error: Content is protected !!