News October 27, 2025

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள், அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு, உயிர்சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Similar News

News October 27, 2025

USA-வின் 100% வரியில் இருந்து தப்பியதா சீனா?

image

சீனா மீதான USA-ன் 100% வரி நவ.1-ல் அமலுக்கு வரவிருந்தது. இதுதொடர்பாக இரு நாடுகளும் 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தின. அதில், முன்னேற்றமும் காணப்பட்டதால் வரியை உயர்த்தும் முடிவில் இருந்து USA பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அக்.30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். அன்றைய தினம் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 27, 2025

ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் புஸ்ஸி ஆனந்த்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்தின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. SC-யின் தீர்ப்பின்படி, கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்மனுதாரராக கரூர் போலீஸ் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

News October 27, 2025

சற்றுமுன்: இந்திய வீராங்கனை தற்கொலை

image

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம்(35) ம.பி.,யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். ரோகிணி கலாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்கொலை தீர்வல்ல!

error: Content is protected !!