News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Similar News
News September 19, 2025
விரைவில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூல்

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், முதற்கட்டமாக 1.5 கோடி மீட்டர்கள் தான் பொருத்தப்பட உள்ளன. இவை பொருத்தப்பட்டதும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும். அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஒப்பந்த நிறுவனங்களே இந்த மீட்டர்களை பராமரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
News September 19, 2025
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, தினசரி சில உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை மேலே உள்ள புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளோம். படங்களை swipe செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் அன்பானவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.