News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Similar News
News December 13, 2025
கரூர்: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News December 13, 2025
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினம் இன்று!

நாட்டின் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில், யாரும் எதிர்பாராத வகையில் 2001 டிச.13-ம் தேதி, LeT, JeM அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சல், விவேகத்தின் காரணமாக இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 9 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டார்.
News December 13, 2025
இன்று இரவு தூங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

இந்த ஆண்டின் மிகப்பெரிய & கண்கவர் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஜெமினிட் விண்கல் பொழிவு (Geminid Meteor Shower) இன்று இரவு நடைபெறுகிறது. இரவு தொடங்கும் இந்த விண்கல் மேஜிக் ஷோ, நாளை (டிச. 14) அதிகாலை 1 மணி- 3 மணிக்குள்(இந்திய நேரப்படி) உச்சம் தொடுமாம். அப்போது, 1 மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் வரை பொழிய வாய்ப்புள்ளது. தமிழகத்திலும் இதை பார்க்கலாம் என்பதால், தூங்கிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!


