News April 26, 2024
வேட்பாளர் மறைவால் தேர்தல் தள்ளிவைப்பு

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில், 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அசோக் பஹலவி, ஏப்.9 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1952இன் படி, பேதுல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, மே 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Similar News
News March 9, 2026
மார்ச் 11-ல் பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. *பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கக் கூடாது. SHARE IT
News March 9, 2026
தேர்தல் பணி: விசாரணைக்கு விலக்கு கேட்ட விஜய்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நாளை டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நாளை தவெக வேட்பாளர்களின் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வேண்டி விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 9, 2026
அமெரிக்கா இங்கு மட்டும் தாக்குதல் நடத்தாது

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும், அந்நாட்டில் உள்ள கார்க் தீவை தொடவில்லை. ஈரானின் கடற்கரையிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த தீவு, மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாக உள்ளது. ஒரே நாளில் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றும் திறன் கொண்டது. கார்க் தீவை தாக்கினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால் USA தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.


