News August 9, 2024

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

image

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Similar News

News November 22, 2025

இந்துக்கள் இல்லையென்றால் உலகம் இல்லை: RSS தலைவர்

image

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் என RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உலகில் தோன்றிய கிரீஸ், எகிப்து, ரோமன் என எல்லா நாகரீகங்களும் அழிந்துவிட்டன எனவும், ஆனால் பாரதம் என்பது அழிவே இல்லாத நாகரீகம் என அவர் கூறியுள்ளார். மேலும், எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் இந்தியா ஒற்றுமையாக, உறுதியாக நின்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

குறுக்கே நிற்கும் PAK.. இந்தியா – ஆப்கன் எடுத்த முடிவு

image

இந்தியாவும், ஆப்கனும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. ஆனால், போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அடிக்கடி சாலைகளை மூடுவதால், கடல் மற்றும் வான்வழியாக வர்த்தகத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும், டெல்லி, அமிர்தரஸிலிருந்து காபூலுக்கு 2 சிறப்பு சரக்கு விமானங்கள் மூலமும் வர்த்தகம் செய்ய உள்ளதாக இருநாடுகளும் அறிவித்துள்ளன.

News November 22, 2025

பஞ்சாங்கத்தை மாற்றக்கூடியவர் CM: சேகர் பாபு

image

<<18347216>>பஞ்சாங்கப்படி<<>> எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பஞ்சாங்கத்தையே மாற்றக்கூடிய மதிநுட்பம் கொண்டவர் CM ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். 2021-ல் இதே பாஜக, ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, ஆட்சியமைக்க மாட்டார் என்று சொன்னதாக குறிப்பிட்ட அவர், அப்போதிருந்தே அவர்களுக்கு CM தோல்வியையே பரிசாக அளித்து வருவதாக கூறினார்.

error: Content is protected !!