News August 9, 2024
போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <
Similar News
News November 27, 2025
சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம்

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, வழக்கமான கஞ்சி, சாதாரண சாப்பாட்டுக்கு பதில், பாயசம், அப்பளத்துடன் உணவு வழங்கப்படும். இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
News November 27, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் சிவகாசி மாநகர தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் L.நாகராஜன், KT ராஜேந்திர பாலாஜி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பட்டாசு தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது.
News November 27, 2025
₹1.17 கோடியில் காருக்கு பேன்ஸி நம்பர்!

காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க ஒருவர் ₹1.17 கோடி செலவு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இது ஹரியானாவில் நடந்துள்ளது. HR88B8888 என்ற பேன்ஸி நம்பரை பெறுவதற்கு அடிப்படை ஏலத் தொகையாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடுமையான போட்டி நிலவ, இறுதியாக ஒருவர் ₹1.17 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார். இந்த பணத்தில் 4-5 கார்கள் வாங்கலாமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர். நீங்க பேன்ஸி நம்பர் வாங்கி இருக்கீங்களா?


