News August 9, 2024
போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <
Similar News
News January 7, 2026
பராசக்தி ரிலீஸ் ஆவதிலும் சிக்கலா?

சென்சார் பிரச்னையால் ’ஜனநாயகன்’ ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ‘பராசக்தி’ படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சியில் தியேட்டர் ஒன்றில், இரு படங்களின் முன்பதிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. புக்கிங்கில் 2 படங்களும் ரெக்கார்ட் படைத்துவந்த நிலையில், தற்போது புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 7, 2026
BREAKING: பொங்கல் பணம்.. கடைசி நேரத்தில் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் ₹3000 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், கடைசி நேரத்தில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆம்! CM தொடங்கி வைத்த உடனே, மாநிலம் முழுவதும் டோக்கனில் நாளை (8-ம் தேதி) என குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
EPS-க்கு திகுதிகுவென எரிகிறது: ரகுபதி

EPS-ன் முதல்வர் கனவு மட்டும் எப்போதும் கானல் நீராகத்தான் இருக்கும் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால் EPS-க்கு திகுதிகுவென எரிகிறது என்றும் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணி மாறுபவர் அன்புமணி என விமர்சித்த EPS தான், தற்போது வேடந்தாங்கலில் ஐக்கியமாகி இருக்கிறார் என்றும், கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா என ஓராண்டாக EPS ஓலமிட்டதாகவும் சாடினார்.


