News August 9, 2024

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

image

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Similar News

News December 17, 2025

தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

image

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 17, 2025

தமிழகம் கேட்டது… மத்திய அரசு தந்தது: CM

image

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு கேட்ட நிதியில் (₹24,670 கோடி), வெறும் 17%-ஐ (₹4,130 கோடி) மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு வென்றதுபோல, காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.

News December 17, 2025

₹1 லட்சத்துக்கு ₹74 லட்சம் வட்டி.. கிட்னியை விற்ற விவசாயி!

image

பால் பண்ணை வைக்க மகாராஷ்டிர விவசாயி, தினமும் ₹10,000 வட்டி என்ற கண்டிஷனுடன் ₹1 லட்சம் கடன் வாங்குகிறார். ஆனால், தொழிலுக்காக வாங்கிய மாடுகள் இறந்துவிட, நிலம், டிராக்டரை விற்றும் கடன் தீரவில்லை. கம்போடியா சென்று கிட்னியை ₹8 லட்சத்துக்கு விற்க, கடன்காரர்கள் வட்டியுடன் ₹74 லட்சம் வேணும் என்கின்றனர். வாழ்க்கை இருண்டுவிட, நீதி வேணும், இல்லனா குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என அவர் கண்ணீருடன் நிற்கிறார்.

error: Content is protected !!