News August 9, 2024

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

image

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Similar News

News November 26, 2025

ஓபிஎஸ், டிடிவி தினகரனின் பிளான் தோல்வியா?

image

அதிமுக ஒருங்கிணைப்பு என்ற திட்டத்திலிருந்து செங்கோட்டையன் பின் வாங்கியதன் விளைவே மாற்றுக் கட்சியில் இணையும் முடிவு. தவெகவா (அ) திமுகவா என்பதை மட்டுமே அவர் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுவொருபுறம் இருக்க, அதிமுக ஒருங்கிணைப்பு என செங்கோட்டையன் வாயிலாக காய்நகர்த்தி வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனின் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News November 26, 2025

ALERT: 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், நவ.29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த RED ALERT-யை X தளத்தில் இருந்து IMD நீக்கியுள்ளது. அதேநேரம், நவ.29-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.

News November 26, 2025

செங்கோட்டையன் ராஜினாமா செய்தது ஏன்?

image

பொதுவாக ஒரு கட்சியில் MLA-வாக இருப்பவர், பதவியை ராஜினாமா செய்யாமல் வேறு கட்சிக்கு தாவினால் சிக்கல் ஏற்படும். கட்சித் தாவல் தடைச் சட்டப்படி சபாநாயகர் அந்நபரை தகுதி நீக்கம் செய்யலாம். எனவேதான் KAS தன்னுடைய MLA பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதேபோலதான் 2017-ல் தினகரன் ஆதரவு அதிமுகவினர் 18 பேரை இச்சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

error: Content is protected !!