News July 5, 2024
தபால் வாக்கு செலுத்தும் பணி தொடங்கியது

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கை செலுத்தினர். இந்தப் பணி அடுத்த 3 நாள்களுக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்துள்ளார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
Similar News
News September 22, 2025
அன்புமணி கைப்பாவையாக செயல்படுகிறார்: MLA அருள்

அன்புமணி, அவரது தந்தையை சந்திக்க வேண்டும், அவர் பேச்சை கேட்பதாக கூற வேண்டும் என்று MLA அருள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்தாலே, அவர் எதிர்பார்த்ததும், எதிர்பாராததும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்புமணி கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இயக்குபவரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ராமதாஸை இயக்க யாரும் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.
News September 22, 2025
நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கிறீர்களா?

நவராத்திரியில் அம்பாள் அருள்பெற பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், டாக்டரை பரிசீலிக்காமல், உண்ணாவிரதம் இருப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சோர்வு, தலைச்சுற்றல், ரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
News September 22, 2025
வைஷாலிக்கு தமிழக அரசு பணி

செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு, தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் பணிக்கான நியமன ஆணையை, CM ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், கால்பந்து வீராங்கனை சுமித்ரா, கூடைப்பந்து வீராங்கனை சத்யா, பாய்மரப்படகு வீரர் சித்ரேஷ் ஆகியோருக்கும் அரசு பதவிக்கான பணி நியமன ஆணைகளை CM வழங்கினார். இவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.