News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News November 27, 2025
தஷ்வந்த் வழக்கில் TN அரசுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில், தஷ்வந்த் விடுதலைக்கு எதிரான தமிழக அரசின் <<18388187>>சீராய்வு மனுவை<<>> சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.
News November 27, 2025
இம்ரான் கான் எங்கு இருக்கிறார்?

EX பாகிஸ்தான் PM <<18395665>>இம்ரான் கான்<<>> உயிரிழந்துவிட்டதாகவும், சிறையில் இருந்து மாற்றப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை என அடியாலா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல், 5 ஸ்டார் ஹோட்டலில் கூட கிடைக்காத வகையில், அவருக்கு தரமான உணவு, TV, ஜிம் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
சப்போட்டா பழத்தின் நன்மைகள் தெரியுமா?

இயற்கையாகவே இனிப்புமிக்க பழங்களில் ஒன்று சப்போட்டா. நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட இதில் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக *செரிமானத்திற்கு உதவுகிறது *உடனடி ஆற்றலை வழங்கும் *பார்வை மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது *எலும்புகள் வலுவாகும் *இரைப்பை, குடலுக்கு நல்லது *ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


