News January 23, 2025

ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

Similar News

News November 25, 2025

திரைப்பட விழாவில் கெத்து காட்டும் பாட்ஷா

image

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?

News November 25, 2025

நவம்பர் 25: வரலாற்றில் இன்று

image

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.

News November 25, 2025

மே.வங்கத்தில் 10 லட்சம் SIR விண்ணப்பங்கள் நிராகரிப்பு

image

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!