News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News December 1, 2025
டிசம்பர் 1: வரலாற்றில் இன்று

*1900 – இதழாளர் சாமி சிதம்பரனார் பிறந்தநாள். *1947 – கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மறைந்த நாள். *1955 – பாடகர் உதித் நாராயண் பிறந்தநாள். *1988 – உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு. *1990 – அரசியல்வாதி விஜயலட்சுமி பண்டிட் மறைந்த நாள். *1997 – பிஹாரின், லக்ஷ்மண்பூர் பதேவில் ரன்வீர் சேனா அமைப்பு நடத்திய தாக்குதலில் 63 தலித்துகள் கொலை.
News December 1, 2025
இந்தியாவில் HIV-AIDS பாதிப்பு குறைவு

இந்தியாவில் 2010-2014-க்கு உட்பட்ட காலக்கட்டத்தில் HIV-AIDS பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய பாதிப்பு அளவு 48.7% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், உயிரிழப்போர் எண்ணிக்கை 81.4% குறைந்துள்ளதாகவும், தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் பாதிப்பும் 74.3% சரிந்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 2024-25-ல் பரிசோதனை எண்ணிக்கை 6.62 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
சச்சின் டெண்டுல்கர் பொன்மொழிகள்!

*உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *விமர்சனங்களை உங்களின் வெற்றிப் படிகட்டுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை.


