News January 23, 2025
ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
Similar News
News December 2, 2025
கொட்டும் கனமழை.. விமான சேவை ரத்து

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அகமதாபாத், அந்தமான், மும்பை செல்லக்கூடிய பல விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News December 2, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.2) சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹30 குறைந்து ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹196-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,96,000-க்கும் விற்பனையாகிறது.
News December 2, 2025
FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.


