News August 14, 2024
Post-Mortem report: பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பலாத்காரம்

மேற்குவங்க பெண் பயிற்சி மருத்துவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அவர், கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், அவர் கூட்டு வன்முறைக்கு ஆளானது, தற்போது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைதான சூழலில், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
News December 3, 2025
வணிகர்கள் 4 மாதங்கள் ₹500 கட்டணமின்றி பதிவு செய்யலாம்

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்த உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ம் தேதி வரை, நிரந்தர உறுப்பினராவதற்கு ₹500 கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாமல், வருடத்திற்கு ₹40 லட்சம் வரை விற்றுமுதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
News December 3, 2025
மொபைல் APP சர்ச்சை.. திரும்ப பெற்ற மத்திய அரசு

மொபைல் நிறுவனங்கள் ‘Sanchar Saathi’ செயலியை கட்டாயமாக Preload செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாடு முழுவதும் இந்த செயலியை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, <<18447303>>‘Sanchar Saathi’<<>> செயலி மூலம் மக்களை மத்திய அரசு வேவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.


