News August 14, 2024

Post-Mortem report: பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பலாத்காரம்

image

மேற்குவங்க பெண் பயிற்சி மருத்துவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அவர், கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், அவர் கூட்டு வன்முறைக்கு ஆளானது, தற்போது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைதான சூழலில், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

10 பேர் பெயரை விஜய்யால் சொல்ல முடியுமா? நயினார்

image

இந்தியாவையே நாளை பிடித்துவிடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். 234 தொகுதிகளில் வரிசையாக 10,15 வேட்பாளர்கள் பெயரை அவரால் சொல்ல முடியுமா? விஜய்யை குறை சொல்லவில்லை, அவருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை மறுக்கவில்லை; ஆனால், இது சினிமா அல்ல, அரசியல். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் போட்டு, வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

செங்கோட்டையன் அதிர்ச்சி.. மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்

image

கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவிலிருந்து விலகிய வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். SP வேலுமணியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் MGR இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சந்திரசேகரனை வளைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக வேலுமணி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.

News December 25, 2025

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?

image

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதற்கு தெளிவான காரணம் தனக்கு தெரியவில்லை என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாததே முக்கிய காரணமாக இருக்கும் என கருதுவதாக அவர் கூறியுள்ளார். சூர்யா பிஸியாக இருந்ததால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால், இடைவெளிவிட்டு ஷூட்டிங் நடத்தினால், பட்ஜெட் எகிறும் என்பதால் சூர்யா வெளியேறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!