News April 22, 2025

போப் மறைவு.. இந்தியாவில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

image

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த போப் ஆண்டவருக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாள்களில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது.

Similar News

News September 11, 2025

கல்வியை பறிக்கும் உங்களுடன் ஸ்டாலின்: நயினார்

image

தேர்தல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திருச்சியில் ஆலத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விளம்பர நாடகங்களை அரங்கேற்ற மாணவர்களின் படிப்பை தூக்கியெறிந்து அவர்களின் வாழ்வில் விளையாடுவதா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 11, ஆவணி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை

News September 11, 2025

விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் BYD..!

image

சீனாவின் BYD நிறுவனம், இந்தியாவில் EV உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. மேலும், புதிய ரக EV SUV கார்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-லேயே உற்பத்தி ஆலையை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், இந்தியா – சீனா உறவு விரிசலால், அது கிடப்பில் போடப்பட்டது. BYD வருகையால் டெஸ்லா, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!