News February 17, 2025
ஏழை மக்களும் இனி ₹250க்கு முதலீடு செய்யலாம்

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுத் திட்டங்களை மக்கள் பெரிய விஷயமாக பார்த்த காலம் மலையேறப் போகிறது. ஆம், ‘ஜன் நிவேஷ்’ என்ற பெயரில் புதிய SIP திட்டத்தை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் SIP. இனி, ஜன் நிவேஷ் திட்டத்தில் குறைந்தபட்சம் ₹250 முதல் நீங்கள் முதலீடு செய்யலாம். ஏழை மக்களும் முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாகும்.
Similar News
News March 3, 2026
அமித் ஷா கேட்டும் அசையாத EPS

ராஜ்பசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் EPS. இதில் தொகுதி பங்கீட்டை விட ராஜ்யசபா சீட் பற்றி தான் நீண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள GK வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுக்கும்படி அமித்ஷா கேட்டாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த EPS, அன்புமணி மற்றும் அதிமுகவே 2 சீட் என உறுதியாக கூறிவிட்டாராம்.
News March 3, 2026
விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 3, 2026
பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா?

இஸ்ரேல், US-ன் தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாகவே இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெயும், 60% LPG-யும் கப்பலில் வருகின்றன. இந்நிலையில் ஈரானின் தடையால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அச்சம் எழுந்தது. எனினும் அடுத்த 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் & 30 நாள்களுக்கான LPG-யும் கையிருப்பில் உள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயராது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


