News March 20, 2024
பொன்முடி வழக்கு நாளை விசாரணை

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Similar News
News November 20, 2025
INDIA கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

பிஹார் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக காங்கிரஸ் தலைமை சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும், இதர மாநிலங்களில் தேவைக்கு ஏற்ப தொகுதி பங்கீட்டை உறுதி செய்து, கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் INDIA கூட்டணி முடிவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 20, 2025
ரிஷப் பண்ட் கேப்டன்.. சுப்மன் கில் OUT?

கழுத்து வலி காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை சுப்மன் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் விளையாடவுள்ளார். 2-வது டெஸ்ட் வரும் 22-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறுகிறது.
News November 20, 2025
ராசி பலன்கள் (20.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


