News March 20, 2024

பொன்முடி வழக்கு நாளை விசாரணை

image

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Similar News

News April 28, 2025

மோசமான ஃபார்ம் குறித்து பண்ட் விளக்கம்

image

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபார்ம் குறித்த கேள்விக்கு, இது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என LSG கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சீசனில், நமக்கு சாதகமாக நடக்காதபோது, ஒரு வீரராக நம் மீது கேள்வி எழுவது உண்மைதான், ஆனால் அதை பற்றி மட்டும் தீவிரமாக யோசிக்க கூடாது எனவும், இது ஒரு டீம் விளையாட்டு என்பதால், தனி வீரர்களை மட்டுமே எப்போதும் நம்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News April 28, 2025

டிரெஸ்ஸை கழட்டிட்டு உட்கார சொன்னாரு: நடிகை பகீர்

image

நடிகை நவீனா போலே பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த முதல் சந்திப்பிலேயே டிரெஸ்ஸை கழட்டிவிட்டு தன் முன் உட்கார சொன்னதாகவும், டிரெஸ் இல்லாமல் தனது உடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவதாக சஜித் கூறியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

image

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.

error: Content is protected !!