News March 20, 2024
பொன்முடி வழக்கு நாளை விசாரணை

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Similar News
News December 10, 2025
ஜான் சீனா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் & பேட் நியூஸ்!

WWE-ல் அதிக ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, அதில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 நாள்களே உள்ளன. வரும் 13-ம் தேதி பாஸ்டனில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டியாகும். இதனால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளார். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு WWE தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவரை Ring-ல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது.
News December 10, 2025
மத்திய அரசு எடுக்கும் முடிவு.. உங்கள் வங்கி கணக்கு மாறலாம்

நாடு முழுவதும் உள்ள 6 சிறிய பொதுத்துறை வங்கிகளை, பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஒன்றிணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கு எண், IFSC கோடு, வங்கி கணக்கு புத்தகம், ATM கார்டு உள்ளிட்ட வங்கி விவரங்கள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்றிணைப்பு 2026-27 நிதியாண்டில் தொடங்கும் என கூறப்படுகிறது.
News December 10, 2025
பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த குடும்பம்!

கணவன், மனைவி பிரிவிற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பூண்டு மற்றும் வெங்காயத்தால் குஜராத்தில் ஒரு குடும்பம் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. மனைவி தீவிர வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது. ஆனால், கணவனும் அவரது தாயாரும், அதை பொருட்படுத்தாமல் உணவில் சேர்த்து சாப்பிட்டதால், தம்பதிக்குள் நாள்தோறும் சண்டை. கடைசியில் 11 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.


