News August 15, 2024
பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’

வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்தார். பொதுப்பெயர் வகை மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
Similar News
News November 14, 2025
வேலைக்கு செல்வோருக்கு ₹15,000 கொடுக்கும் அரசு

முதல் முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ELI திட்டத்தின் மூலம் ₹15,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 6 மாதம் வேலை செய்த பிறகு முதல் தவணையும், ஒரு வருடத்திற்கு பிறகு, 2-வது தவணையும் வழங்கப்படும். இதனை பெற மாத சம்பளம் ₹1 லட்சத்திற்கு மிகாமலும், EPFO கணக்கும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை EPFO உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும். SHARE.
News November 14, 2025
வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: அரசு முக்கிய அறிவிப்பு

சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவுரையின் படி, FASTag இல்லாத வாகனங்களுக்கான டோல் கட்டணம் இன்று நள்ளிரவு (நவ.15) முதல் மாற்றப்படுகிறது *FASTag இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள், FASTag உள்ள வாகனங்களை விட 2 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் *FASTag இல்லாத வாகனங்கள், UPI மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். SHARE IT.
News November 14, 2025
BREAKING: தெ.ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் மார்க்ரம், ரிக்கெல்டன் ஆகியோர் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நடுவரிசை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ், முல்டர் மற்றும் கேப்டன் பவுமாவை ஆட்டம் இழக்க செய்தார். தற்போது 147-7 என்ற நிலையில் தெ.ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.


