News August 15, 2024
பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’

வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்தார். பொதுப்பெயர் வகை மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
Similar News
News November 22, 2025
வணிகம் 360°: US நிறுவனத்துடன் கைகோர்க்கும் TCS

*பிரபல உணவுப்பொருள் நிறுவனமான வில்மருடனான பங்குகளை அதானி குழுமம் முழுமையாக விற்றது. *நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இந்தியா முழுவதும் AI தரவு சேமிப்பகங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின், டிபிஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
*நாட்டில் போதிய அளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
News November 22, 2025
காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
News November 22, 2025
தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: கனிமொழி

ஒவ்வொரு மசோதாக்களின் மூலமாகவும் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு சரியான நிதி பகிர்வை வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மெட்ரோ உள்பட நமக்கு வரவேண்டி ரயில் திட்டங்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், அதனை எதிர்த்து திமுக போராடுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.


