News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 20, 2026
நிதிஷ் தான் சரியான மாற்று வீரர்: இர்பான் பதான்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ODI-ல் நிதிஷ் குமார் ரெட்டி அரைசதம் அடித்து அசத்தினார். இதுகுறித்து பேசிய இர்பான் பதான், ஹர்திக் பாண்டியாவுக்கு நிதிஷ் சரியான மாற்று வீரர் என்று கூறினார். 135 கிமீ வேகத்தில் பந்து வீசவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் அவருக்கு திறன் உள்ளது. அவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
News January 20, 2026
விமான கட்டணம் உயர்வு: நோட்டீஸ் அனுப்பிய SC

பண்டிகைக் காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி பயணிகளைச் சுரண்டுவதாக SC கருத்து தெரிவித்துள்ளது. தனியார் விமான நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த கட்டண உயர்வு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் DGCA-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
News January 20, 2026
ஜெயகாந்தன் பொன்மொழிகள்

*யாரைப் பற்றி நினைக்கும்போது மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள். *நான் ஒருபோதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம். *ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும். *சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை. *தன்னை விட தன் திறமை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது சுயமரியாதை, கர்வம் அல்ல.


