News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News September 15, 2025

AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

image

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?

News September 15, 2025

இன்றிரவு 12 மணிக்குள் இதை செய்யுங்கள்

image

வருமானவரி கணக்கு தாக்கல் (IT Returns) செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி என வருமானவரித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே, உங்கள் கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் <<17715443>>தாக்கல்<<>> செய்துவிடுங்கள். தவறினால் <<17712332>>₹5,000 அபராதம்<<>> செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6.7 கோடி பேர் தங்கள் IT Returns-ஐ தாக்கல் செய்துள்ளனர்.

News September 15, 2025

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக கோபப்பட்ட மோகன்லால்

image

மலையாள பிக்பாஸில் தன்பாலின ஜோடி பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இவர்களை போன்றோரை தங்கள் வீட்டிற்குள்ளே விடமாட்டோம் என்று சக பெண் போட்டியாளர்கள் கூறினர். ஆனால், அவர்களுக்கான அங்கீகாரத்தை கோர்ட்டே கொடுத்துள்ளபோது, இப்படி கூற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? என தொகுப்பாளரான மோகன்லால் கோபமாக கேட்டார். இவர்களை தன் வீட்டுக்குள் அனுமதிப்பேன் என்றும் கூறிய அவரது கருத்துக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.

error: Content is protected !!