News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 26, 2025
இது காட்டுமிராண்டித்தனம்: ஜான்வி கபூர்

எந்தவொரு நிலையிலும் தீவிரவாதம் மனிதநேயத்தை மறப்பதற்கு முன்பு அதை கண்டித்து எதிர்க்க வேண்டும் என்று ஜான்வி கபூர் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் சிபு சந்திர தாஸ் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நடப்பது காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.
News December 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 561 ▶குறள்: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ▶பொருள்: நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
News December 26, 2025
விரைவில் புதிய மெயில் ஐடி.. கூகுளின் முக்கிய முடிவு

ஜிமெயில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. முகவரியை மாற்றுவதால் பயனரின் எந்தத் தரவுகளும் (மின்னஞ்சல்கள், புகைப்படங்கள்) பாதிப்படையாது. இருப்பினும், பயனர்கள் தனது ‘@gmail.com ஐடி’யை ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப், ஆதார் ஆகியவற்றுடன் இணைத்திருந்தால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


