News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 10, 2026

7 பேரின் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் மணிமாறன் (38). இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 5 ஆண், 2 பெண், என மொத்தம் 7 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முன் வந்தார். உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று, நேற்று (ஜனவரி 10) வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து மாலைகள் உள்ளிட்ட இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார்.

News January 10, 2026

பிக்பாஸில் இந்த வாரம் எவிக்‌ஷன் இவரா?

image

பிக்பாஸ் ஃபைனலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில், டாப் 5-ல் அரோரா, சாண்ட்ரா, திவ்யா, சபரி, விக்ரம் உள்ளனர். ₹18 லட்சம் பணப்பெட்டியுன் கானா வினோத் வீட்டைவிட்டு வெளியேறினாலும், இந்த வாரமும் எவிக்‌ஷன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. TTF வென்றதால் அரோரா நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டார். தற்போது, விக்ரம் & சாண்ட்ரா குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சரில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் வெளியேறுவார்?

News January 10, 2026

இனி பள்ளிகளில் மாலை சிற்றுண்டி?

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலை நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்க பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் வாழைப்பழம், சிறுதானியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாம். ஒருவேளை செயல்படுத்தப்பட்டால் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம்?

error: Content is protected !!