News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
‘ஆர்யன்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிப்பில், பிரவீன் கே இயக்கியுள்ள ‘ஆர்யன்’ படம் அக்.31-ம் தேதி வெளியானது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், கடைசி பாதி ஸ்லோவாக இருந்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
News November 23, 2025
அடிக்காமலே அலறும் திமுக: விஜய் பாய்ச்சல்!

காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்த விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா என பாடி கலாய்த்த அவர், பாப்பா என சாஃப்டாக தான் விமர்சனம் செய்ததாகவும் விளக்கமளித்தார். அத்துடன், இன்னும் விமர்சிக்க ஆரம்பிக்கவே இல்லை, அடிக்க ஆரம்பிக்கவே இல்லை எனவும் அதற்குள் அலறுனா எப்படி என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 23, 2025
பெண்களுக்கு நார்மல் பிரசவம் நடப்பது இப்படிதான் (PHOTOS)

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் உச்சபட்ச ஆசையும் நார்மல் டெலிவரி காண்பதே. பொதுவாக, 37 வாரங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் பிரசவ வலி தொடங்கலாம். நீங்கள் எதிர்பார்த்தபடி இயற்கையாக வலி வந்தாலும் சரி, அல்லது மருத்துவ தலையீடு மூலம் வலி தூண்டப்பட்டாலும் சரி, நார்மல் டெலிவரி வெற்றியடைய சில முக்கிய அம்சங்கள் சரியான முறையில் அமைய வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…


