News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 11, 2025
1,000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் PHOTOS

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அவற்றில் சில கோயில்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. அவை மிகவும் பழமையானவை மட்டுமல்ல, வரலாற்று சின்னமாகவும் திகழ்கின்றன. உங்களுக்காக, மேலே 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 11, 2025
காற்றுமாசை துல்லியமாக ஆராயும் சென்னை IIT

டெல்லி காற்றுமாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், காற்று மாசுபாட்டிற்கான துகள்கள் காலப்போக்கில் எவ்வாறு வேதியியல் மாற்றம் அடைகிறது என்பதை IIT சென்னை ஆராய்ந்து வருகிறது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு எவ்வாறு மாற்றமடைகிறது என துல்லியமாக கண்டறிய முடியுமாம். இதன்மூலம் எது நமக்கு பேராபத்தை உண்டாகுமென கண்டறித்து அதை மட்டும் தவிர்க்க முடியும்.
News December 11, 2025
முதிர்ச்சியற்ற யூடியூபர்களால் பாழான மெய்யழகன்: கார்த்தி

‘மெய்யழகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லையே என நடிகர் கார்த்தி ஆதங்கப்பட்டுள்ளார். அப்படி வெற்றிப் படமாக அமைந்திருந்தால், இதுபோன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கும் என்றார். படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததற்கு மக்கள் மீது பிரேம் கோபப்படவில்லை என்ற கார்த்தி, ஆனால் முதிர்ச்சியற்ற யூடியூபர்களே படத்தை நாசமாக்கிவிட்டனர் என வருத்தப்பட்டார்.


