News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 564
▶குறள்:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
▶பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

News December 29, 2025

விஜய்யின் புதிய குட்டி ஸ்டோரி

image

‘ஜனநாயகன்’ விழாவில் ரசிகர்களிடம் குட்டி ஸ்டோரி ஒன்றை விஜய் பகிர்ந்தார். தன் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணி, மழையில் நனையக்கூடாது என ஆட்டோகாரர் குடையை தருகிறார். எப்படி திருப்பி தருவது என கேட்டதற்கு, குடை தேவைப்படும் ஒருவரிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். பல கைகள் மாறிய அக்குடை இறுதியாக ஆட்டோகாரர் மகளிடம் வந்தது. எனவே, சின்ன சின்ன நல்லது செய்தால் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.

News December 29, 2025

மன உளைச்சலை உண்டாக்கும் திமுக அரசு: அன்புமணி

image

உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்தால் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் பணிசெய்யும் அதிகாரிகள், இனி நெல், வாழை, காய்கறி பயிர், வேளாண் பொறியியல் திட்டங்களையும் கண்காணிப்பார்கள் எனக் கூறியுள்ளார். இது அவர்களை கட்டாயப்படுத்தும் செயல் என்றும் திமுக அரசு கொடுக்கும் மன உளைச்சல் எனவும் X-ல் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!