News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 555 ▶குறள்:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
▶பொருள்: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
News December 20, 2025
இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

U19 ஆசிய கோப்பையில் அரையிறுதியில் இலங்கையை தோற்கடித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றிலேயே பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்தியா கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.
News December 20, 2025
பாரம்பரிய மருத்துவத்தில் யோகாவும் உள்ளது: PM மோடி

பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது WHO சர்வதேச உச்சிமாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய PM மோடி, உலகம் முழுவதும் ஆரோக்கியம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பாதையை யோகா காட்டியுள்ளதாக கூறியுள்ளார். பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோகாவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் தான் பாராட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


