News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 12, 2025

OPS-ஐ அதிமுகவில் சேர்க்க தயாராகும் EPS

image

தென் மாவட்ட நிர்வாகிகளும், பாஜக தலைமையும் கொடுத்த அழுத்தம் காரணமாக, OPS-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க EPS இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல், தனது தலைமையை ஏற்பதாக OPS அறிவிக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டுள்ளாராம். அதேபோல், TTV-வை சேர்க்கவே முடியாது என்றும் கூறிவிட்டாராம். நேற்று நயினார் உடனான சந்திப்பின் போது இதுதொடர்பாகத்தான் ஆலோசிக்கப்பட்டதாம்.

News December 12, 2025

இன்று முதல் 17 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1,000

image

தமிழகத்தில் தற்போது 1.14 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதி வாய்ந்த விடுபட்ட மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் பணியை CM ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார்.

News December 12, 2025

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!