News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 20, 2025
செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

வாடிக்கையாளர்களுக்கு சமீப காலமாக BSNL நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹1-ல் ஒரு மாதத்தை சமாளிக்கும் ஆஃபர் ஜன.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிம் வாங்குபவர்கள் ₹1 பிளானில் 30 நாள்களுக்கு தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும்.
News December 20, 2025
அகண்டா 3-ல் சூப்பர் ஹீரோஸ்!

பாலையா நடிப்பில் வெளியான அகண்டா 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் போயபதி, நான் வேறு சில படங்களை முடித்த பிறகு அகண்டா 3 பற்றி யோசிப்பேன். அவெஞ்சர்ஸ் சீரிஸ் போல அகண்டா வர வாய்ப்புள்ளது. அவெஞ்சர்ஸ் கற்பனை சூப்பர் ஹீரோக்கள், ஆனால் நம் புராணங்களில் உண்மையான சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். அவர்களை அகண்டாவில் கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
அப்பாவுக்கு எமனான மகன்கள்!

₹3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அப்பாவை பாம்பை ஏவி கொலை செய்த மகன்கள் போலீசில் சிக்கியுள்ளனர். திருவள்ளூரில் கடந்த 22-ம் தேதி கணேசன்(56) பாம்பு கடித்து உயிரிழந்தார். ஆனால், அது இயற்கை மரணம் அல்ல திட்டமிட்ட கொலை என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 6 மாதங்களில் அப்பா மீது 4 இன்சூரன்ஸ் எடுத்த மோசக்கார மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். பாசம், பற்று போய்விட்டதோ?


