News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 5, 2025

சினிமா பிரபலம் காலமானார்.. கமல் உருக்கமுடன் ஆறுதல்

image

தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் தயாரிப்பாளரான <<18468825>>AVM சரவணன்<<>> பூவுலகை விட்டு மறைந்துவிட்டார். வெளியூர் பயணம் காரணமாக, அவரது இறுதிச் சடங்கில் கமல் பங்கேற்காத நிலையில், உருக்கமுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சரவணன் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். AVM புரொடக்சன் தயாரிப்பில் சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கமல் நடித்துள்ளார்.

News December 5, 2025

புடின் முன்னிலையில் PAK-க்கு செய்தி சொன்ன PM மோடி

image

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 5, 2025

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறாங்களா?

image

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.

error: Content is protected !!