News January 6, 2025
பொங்கல்: கலைப் போட்டிகளை அறிவித்தது அரசு

பொங்கலை முன்னிட்டு 8 பிரிவுகளில் கலைப் போட்டிகளை அரசு அறிவித்துள்ளது. கோலப் போட்டி, ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கான போட்டிகள் என்றும், இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் படைப்புகளை tndlprmhpongal2025@gmail.com முகவரிக்கு அனுப்பலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News September 13, 2025
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ஆகஸ்ட்டில் பணவீக்கம் 2%க்கு மேல் பதிவாகியுள்ளதால், அக்டோபரில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என SBI கணித்துள்ளது. GST வரி மாற்றங்களால், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கத்தை 40-45 அடிப்படை புள்ளிகள் வரை குறையலாம். அதேபோல், வரும் காலாண்டிலும் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதால் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது. இது லோன் வாங்கியவர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
News September 13, 2025
திருச்சியை திக்குமுக்காடச் செய்த விஜய் PHOTOS

தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே திருச்சியை திணறடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். விமான நிலையத்தில் இருந்து விஜய் வர தாமதமான நிலையில், அவர் முதன்முதலில் பரப்புரையை தொடங்குவதாக இருந்த மரக்கடை பகுதியில் பெருங்கூட்டம் திரண்டது. தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த விஜய், ஆரவாரத்திற்கு இடையே உற்சாகமாக உரையாற்றிய போட்டோஸ் வைரலாகி வருகின்றன. மேலே ஸ்வைப் செய்து அதனை பாருங்கள்.
News September 13, 2025
செங்கோட்டையனுடன் இணைந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது ஆதாரவாளர்களுடன் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால், கூட்டணிக்கு தேடி வருபவர்கள் கூட, தற்போது வரவில்லை என்றார். செங்கோட்டையன் விடுத்த 10 நாள்கள் கெடு முடிந்தபின் நல்ல செய்தி வரும் எனவும் அவர் தெரிவித்தார்.