News March 20, 2024
தமிழகத்தில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.19இல் தமிழகம், புதுச்சேரியில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
BREAKING: சிஎஸ்கே அணியில் புதிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சன் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாள்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இந்த சஸ்பென்ஸுக்கு தற்போது கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலளித்துள்ளது. X தளத்தில், ‘Time ആയി’ (‘time has come’) என பதிவிட்டு சாம்சன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. CSK-வில் சஞ்சு ஜொலிப்பாரா?
News November 15, 2025
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு உங்கள் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஜன.15 – பொங்கல் பண்டிகை தினத்தில் ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு நாளை (நவ.16) தொடங்குகிறது. போகி பண்டிகை தினமான ஜன.14 அன்று ஊருக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கிய நிலையில், 8:02-க்கே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன.


