News March 30, 2025

கருத்துக்கணிப்பா?, கருத்து திணிப்பா? சீமான் கேள்வி

image

சி.வோட்டர் கருத்துக்கணிப்பில், 36 லட்சம் வாக்குகள் பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்ற நாதக பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு என்று விமர்சித்த அவர், நான் செய்வது அரசியல் புரட்சி, பிசினஸ் அல்ல. எங்களுடைய எதிரி யார் என தீர்மானித்து தான் களத்திற்கு வந்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை எனத் தெரிவித்தார்.

Similar News

News April 1, 2025

பலாத்காரம் செய்த பாதிரியார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

பஞ்சாபில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மொஹாலி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தனது வித்தியாசமான அணுகுமுறையால் பிரபலமானவர் ‘இயேசு! இயேசு!’ பாதிரியார் பஜிந்தர் சிங். இவர் வெளிநாட்டு பயணத்துக்கு உதவுவதாக கூறி 2018-ல், அப்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து, தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். இதுபோல பல பெண்களை இவர் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

News April 1, 2025

தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்?

image

தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 8 – 10 தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் பெயர்கள் மாநிலத் தலைவர் பதவிக்கும், வானதி சீனிவாசன் பெயர் தேசிய தலைவர் பதவிக்கும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

News April 1, 2025

‘Money heist’ பார்த்து கொள்ளை – சிக்கிய கும்பல்…!

image

கர்நாடகாவில் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸை அதிர வைத்துள்ளது. 2024-ல் SBI வங்கியில் 17 கிலோ தங்க நகைகளை சுருட்டிய வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், Money heist உள்ளிட்ட சீரிஸ் பார்த்து கொள்ளையடிக்க பயிற்சி பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!