News October 13, 2025

அரசியல் வெற்றியா? துயரில் துவள்பவர்களுக்கான நீதியா?

image

கரூர் துயரம், திமுக அரசின் சதி என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் ‘Stand with Viay’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. இந்த சமயத்தில் அரசியல் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று ‘Stand with victims’ என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், CBI விசாரணைக்கு மாற்றம் என்ற SC-ன் தீர்ப்பு தவெகவிற்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி?

Similar News

News October 13, 2025

RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

image

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.

News October 13, 2025

BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

image

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.

News October 13, 2025

சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

image

கரூர் துயர வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தில் முதலில் சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான் என்று குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!