News March 20, 2024

மத்திய அமைச்சர் ஷோபா மீது போலீசார் வழக்குப் பதிவு

image

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதற்கிடையே, அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News April 26, 2025

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்..?

image

நம்மில் பலரும் சாப்பிடும் போது, உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களே. ஆனால், இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது தெரியுமா? உணவை மெதுவாக மென்று உண்ணுபவர்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வயிறு நிரம்பியிருப்பதை உணர நமது மூளை நேரமாகும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். வயிறு நிரம்பியிருப்பதை உணர, மூளைக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம்.

News April 26, 2025

சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

News April 26, 2025

25% விலை குறைவான 18 கேரட் தங்கம்.. அதிகரிக்கும் மவுசு

image

ஆபரண நகைகளில் 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த 2 வகைகளில், 24 கேரட் விலை அதிகமாகும். 22 கேரட் விலை சற்று குறைவாகும். ஆனால் இந்த 2 வகைகளையும் விட 18 கேரட் விலை 25% குறைவு. 24 கேரட், 22 கேரட் விலை அதிகரிப்பதால், அனைவரின் பார்வையும் 18 கேரட் தங்கம் மீது திரும்பியுள்ளது. அதற்கான மவுசும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!