News February 28, 2025
சீமானிடம் போலீஸ் விசாரணை

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் புகார் குறித்து அவரிடம் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் நாதக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News March 1, 2025
சின்னப்பசங்க அப்படித்தான் பேசுவார்கள்: முத்தரசன்

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் பற்றி பேசுவதாக தவெக தலைவர் விஜயை CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் ஹிட்லரை படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சின்னப் பிள்ளைகள் அப்படிதான் பேசுவார்கள், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
News March 1, 2025
தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு: ஜோதிமணி

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், வக்கிரத்துடன் பேசுவது அல்ல என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பொருட்டாக மதிக்காத சீமான் போன்றவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.