News February 28, 2025
சீமானிடம் போலீஸ் விசாரணை

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் புகார் குறித்து அவரிடம் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் நாதக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News March 19, 2026
இன்னும் அமித்ஷா நேரம் ஒதுக்கல: EPS

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இதுவரை எட்டப்படாத நிலையில் EPS டெல்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லிக்கு வந்ததன் நோக்கத்தை நாளை கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 3-வது முறையாக EPS டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2026
BREAKING: தங்கம் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹2,160 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹3,200 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாலையிலும் மாற்றமின்றி கிலோ ₹2.65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
News March 19, 2026
பும்ராவுக்கு அப்புறம் யார்? அஸ்வின் கேள்வி

பும்ராவின் ஓய்விற்கு பிறகு, இந்திய அணியின் பவுலிங் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இதனால் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் பவுலராக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். ஒரு தொடரையோ போட்டியையோ வெல்வதில் பவுலர்கள்தான் முக்கிய பங்காற்றுவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார்.


